உனக்காக என்ற ஒருமையில் ஈருயிர் சேர்ந்து பாடும் காதல் ராகம் இது!உயிர்களெல்லாமே காதல் உணர்வுக்குள் மூழ்கியே கிடக்கும்.முன்பின் தெரியாத முகங்கள் கூட மனங்களால் பேசிட காதல் வழிவகுக்கும்!
பார்க்கும் இடமெங்கும் நீக்கமற கடவுள் நிறைந்திருக்கிறான் என்பார்கள்.கடவுள் நிறைந்திருக்கிறானோ இல்லையோ காதல் நிச்சயமாய் நிறைந்திருக்கும்!
ஆம் இந்த காதலும் அப்படிதான்!உயிர்முழுக்க புரையோடிய இரத்தநாளங்கள் கூட காதல் காதலென துடிக்கும் ஒரு அற்புதமான காதலை சொல்லவருகிறது!அறிமுகமில்லாத இருமனங்கள் சங்கமிக்கும் கணத்தில்
கண்ணிலிருந்து பிறந்து மனத்தில் வளர்ந்து வாழ்க்கையில் சேர்ந்து வாழும்
ஒரு காதல் இங்கே காவியமாய்!
நானும் தோழி தேனுஷாவும் சேர்ந்து எழுதமுடிவு செய்திருக்கிறோம்.தொடரும் இந்த கவிதை மழையில் நனைந்து எங்கள் தவறுகளை சுட்டிகாட்டி இதைஒரு வெற்றிதொடராய் மாற்ற வேண்டும் என
கேட்டுக்கொள்கிறோம்!
தணிகை & தேனுஷா