இன்றைய பயணமெனது
முடிந்தாலும் முடியாததாகிறது
என் பொழுது!
உன்னிடம் விட்டுவிட்ட
மனதையும் பேருந்தில்
உன் பின்னே அனுப்பிய
எண்ணங்களையும்
மீள்சுழல் செய்கிறேன்!
மீளவே இல்லை நான்!
தூக்கமின்மை ஆட்டுவித்த
இரவில் தீட்டுகிறேன்
திட்டங்களை!
எதேச்சையாய் நேர்ந்த
பயணத்தை உனக்காக
தொடர்ச்சியாக்கினேன்!
பூமாலையாகுமென!
0 comments:
Post a Comment