CLICK HERE FOR BLOGGER TEMPLATES AND MYSPACE LAYOUTS »

Thursday, November 27, 2008

இன்றைய பயணமெனது
முடிந்தாலும் முடியாததாகிறது
என் பொழுது!

உன்னிடம் விட்டுவிட்ட
மனதையும் பேருந்தில்
உன் பின்னே அனுப்பிய
எண்ணங்களையும்
மீள்சுழல் செய்கிறேன்!
மீளவே இல்லை நான்!

தூக்கமின்மை ஆட்டுவித்த
இரவில் தீட்டுகிறேன்
திட்டங்களை!

எதேச்சையாய் நேர்ந்த
பயணத்தை உனக்காக
தொடர்ச்சியாக்கினேன்!

நாளை என் காலை
பூமாலையாகுமென!

0 comments: