CLICK HERE FOR BLOGGER TEMPLATES AND MYSPACE LAYOUTS »

Tuesday, December 23, 2008

இடைவெளிக்குள் நிர்பந்தமாய்
நிறுத்தபட்டிருக்கிறது
என் காதல்..

உனக்காக காத்திருந்த
நிமிடங்களெல்லாம்
நிம்மதியடைந்துவிட்டிருக்கிறது!

பிறவிபயனை அடைந்து
விட்டோம் என!

ஒரே ஒரு முறை
நீ எனை பார்க்கையில்
உன் கண்ணை பார்த்து
விடவேண்டுமென நினைக்கையில்

நீ பார்த்தாய்!
நான் பார்க்க முயற்சித்தேன்!

காத்திருந்த கண்களுக்கு
பெரும் விருந்து போல
எதிர் இருக்கையில்
தலை கவிழ்ந்து நீ

உன் தலை நிமிர்வின் போதெல்லாம்
என் விழி பாதாளம் நோக்க
விழி பார்க்க மறந்து
சிரம் தாழ்த்தி நான்

உன்னிடம் பேச வேண்டும்
எத்தனிக்கிறேன் பலமுறை
பார்வைகளில் விழுங்கிக் கொள்கிறேன்
உனையும் இடை வெளியையும்..