CLICK HERE FOR BLOGGER TEMPLATES AND MYSPACE LAYOUTS »

Thursday, October 9, 2008

ஒரு பயணத்தின்
நெரிசலில் தொடங்கியது
நம் விழிப்போர்!

உன்னிலிருந்து விலகி
நிற்கவே நினைத்தேன்
நெருங்கிகொண்டது
மனது!

விழியில் தொலைத்து
இதழில் தேடினேன்
மனதை!

கிடைக்கபெற்றது
சிநேகித புன்னகையும்
அதனூடான மௌனமும்!

பெற்றுகொண்டு
புறப்படுகிறேன் நாளையும்
கிடைக்குமா என?

என் மனதல்ல
உன் தரிசனம்!

முதல் முதலில்
நாம் பார்த்துக் கொண்ட போதே
விழிகள் ஆயிரம் கதை
பேசி இருக்க வேண்டும் !

இப்போதும் விடாமல்
தொடர்கிறது முதல்
பார்வையின் அதிர்வுகள்!

உன் முகம் பார்க்க
நானும் என்னிடம் பேச
நீயும் ஏங்கிய பொழுதுகளில்
ஒளிந்திருந்தது தைரியம்!

ஆயிரம் வம்பு பேசும்
வாயாடி என பெயர் வாங்கிய
நான் உன்னிடம் மட்டும்
பேசிக் கொள்கிறேன் மௌனம்!

Thursday, October 2, 2008

உனக்காக...

உனக்காக என்ற ஒருமையில் ஈருயிர் சேர்ந்து பாடும் காதல் ராகம் இது!உயிர்களெல்லாமே காதல் உணர்வுக்குள் மூழ்கியே கிடக்கும்.முன்பின் தெரியாத முகங்கள் கூட மனங்களால் பேசிட காதல் வழிவகுக்கும்!
பார்க்கும் இடமெங்கும் நீக்கமற கடவுள் நிறைந்திருக்கிறான் என்பார்கள்.கடவுள் நிறைந்திருக்கிறானோ இல்லையோ காதல் நிச்சயமாய் நிறைந்திருக்கும்!
ஆம் இந்த காதலும் அப்படிதான்!உயிர்முழுக்க புரையோடிய இரத்தநாளங்கள் கூட காதல் காதலென துடிக்கும் ஒரு அற்புதமான காதலை சொல்லவருகிறது!அறிமுகமில்லாத இருமனங்கள் சங்கமிக்கும் கணத்தில்
கண்ணிலிருந்து பிறந்து மனத்தில் வளர்ந்து வாழ்க்கையில் சேர்ந்து வாழும்
ஒரு காதல் இங்கே காவியமாய்!
நானும் தோழி தேனுஷாவும் சேர்ந்து எழுதமுடிவு செய்திருக்கிறோம்.தொடரும் இந்த கவிதை மழையில் நனைந்து எங்கள் தவறுகளை சுட்டிகாட்டி இதைஒரு வெற்றிதொடராய் மாற்ற வேண்டும் என
கேட்டுக்கொள்கிறோம்!
தணிகை & தேனுஷா