கூட்டத்தின் நெரிசலில்
உன் கடிகாரத்தில் சிக்கிய
என் துப்பட்டாவை பிரித்த போது
சிக்கிக் கொண்டது என் மனதும்
எங்கேயோ பார்த்த முகமாய்
ஆயிரங்காலம் வாழ்ந்த நிகழ்வாய்
மறுபடி மறுபடி வந்து போனாய்
என் பேருந்து இல்லாப் பயணத்திலும்
உனை மறுபடி பார்ப்பேனா
யார் என அறிமுகம் கொள்வேனா
என முடிந்து போகிறது இன்று.
0 comments:
Post a Comment