CLICK HERE FOR BLOGGER TEMPLATES AND MYSPACE LAYOUTS »

Thursday, November 27, 2008


கூட்டத்தின் நெரிசலில்
உன் கடிகாரத்தில் சிக்கிய
என் துப்பட்டாவை பிரித்த போது
சிக்கிக் கொண்டது என் மனதும்

எங்கேயோ பார்த்த முகமாய்
ஆயிரங்காலம் வாழ்ந்த நிகழ்வாய்
மறுபடி மறுபடி வந்து போனாய்
என் பேருந்து இல்லாப் பயணத்திலும்

மீண்டும் அங்கு வருவாயோ
உனை மறுபடி பார்ப்பேனா
யார் என அறிமுகம் கொள்வேனா
என முடிந்து போகிறது இன்று.

0 comments: